rudrateswarar

rudrateswarar

Wednesday, March 18, 2020

பன்னிருதிருமுறை பாராயண கால அட்டவணை

*சிவசிவ*

*பன்னிரு திருமுறை ஓதும் கால அட்டவணை*

*திருச்சிற்றம்பலம்*

*பாராயணம் துவங்கும் நாள்*

1 ஆம் திருமுறை -சித்திரை 1-ஆம் தேதி 

2 ஆம் திருமுறை -வைகாசி 1-ஆம் தேதி 

3 ஆம் திருமுறை -ஆனி 1-ஆம் தேதி 

4 ஆம் திருமுறை –ஆடி 1-ஆம் தேதி 

5 ஆம் திருமுறை -ஆவணி 1-ஆம் தேதி 

6 ஆம் திருமுறை -ஆவணி  20 ஆம்  தேதி 

7 ஆம் திருமுறை -புரட்டாசி 20 ஆம் தேதி 

8 ஆம் திருமுறை திருவாசகம் -ஐப்பசி 5 ஆம் தேதி 

8 ஆம் திருமுறை திருக்கோவையார் -ஐப்பசி 15 ஆம் தேதி 

9 ஆம் திருமுறை திருவிசைப்பா - ஐப்பசி 25 ஆம் தேதி 

10 ஆம் திருமுறை திருமந்திரம் -கார்த்திகை 5 ஆம் தேதி 

11 ஆம் திருமுறை -மார்கழி 1-ஆம் தேதி  

12 ஆம் திருமுறை - தை 1-ஆம் தேதி

தினமும் தேவாரத்தில் சராசரியாக ஐந்து ( 5 )பதிகங்கள் ஓத வேண்டும்.
பத்தாம் திருமுறை தினம் 120 பாடல்கள் ஓத வேண்டும்.
ஆறாம் திருமுறை தினம் 3 பதிகம் ஓதவேண்டும்.
பனிரெண்டாம் திருமுறை தினம் சராசரியாக 50 பாடல்கள் ஓத வேண்டும்.
இப்படிப் பாராயணம் செய்தால் பன்னிரு திருமுறைகளையும் ஓராண்டில் பாராயணம் செய்யமுடியும்.

 முயற்சி செய்து பாருங்கள் .
சிவபெருமானின் திருவடியைப் பற்றி சிந்தியுங்கள்.

திருச்சிற்றம்பலம்

Thursday, October 24, 2019

சிவாகம சிவதீக்ஷை


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
யார் தருவார் மந்திர உபதேசமும் சிவதீக்ஷையும் ? (சிவாகம சிவதீக்ஷை விழா அழைப்பு )
யார் தருவார் மந்திர உபதேசமும் சிவாகம சிவதீக்ஷையும்  என்ற உங்கள் தேடுதலுக்கும் ஏக்கத்திற்கும் இதோ விடை கிடைக்கப்போகிறது
தீக்ஷை என்றால் உயிரைப்பற்றிய ஆணவ மலத்தைக் கெடுத்து  சிவஞானத்தை கொடுப்பது என்று பொருள் தமிழில் தீக்கை. உடலுக்கு பலசடங்குகள் செய்யப் படுகின்றன  அது போல உயிராகிய ஆன்மாவிற்கு செய்யக்கூடிய சடங்கே தீக்ஷை. வாகனம் ஓட்ட, எப்படி ஓட்டுனர் உரிமம் தேவையோ, நிலம் வாங்க பத்திரப்பதிவு அவசியமோ, தொழில் துவங்க தொழில் உரிமம் தேவையோ, அது போல சிவ சம்பந்தம் எனும் ஆரம்பப்படி நிலையை உறுதிப்படுத்திக்  கொள்ள இம்மை மறுமை நலன்கள் பெற  சிவபெருமான் திருவருள் பெற உரிமம் எனும் தீக்ஷை தேவை .
          
 எந்த வயதினரும் 7வயது முதல் எந்த வயதிலும் ஆண் பெண் இரு பாலரும் தீக்ஷை பெறலாம். தீக்ஷை  பெறாதவர் பொதுச்சைவர் எனப்படுவர். அவர்கள் திருநீற்றை நீரில் குழைத்து  முப்பரிமாணமாக திரிபுண்டரமாக  பூச முடியாது .  மிக உயர்ந்த மந்திரமான ஐந்தெழுத்தை உச்சரிக்கும் அதிகாரம் கிடையாது. மாதா பிதா குரு தெய்வம் என்பது தான் சைவம் காட்டும் நெறி . எனவே குருவின் மூலம் தீக்ஷை பெற வேண்டும். அவர்கள் அருளியதே  நமக்கு பிரமாணம். ஸ்ரீஇராமனுக்கு அகத்தியரும்ஸ்ரீகிருஷ்ணனுக்கு உபமன்யு முனிவரும் சிவதீட்சை  செய்து வைத்துள்ளார்கள் 
ஏன் தீக்ஷை  பெற வேண்டும்?
1.    சிவபெருமானை சிவாகமங்களில் 
விதித்தபடி வழிபாடு செய்வதற்குரிய 
அதிகாரம் பெற்று ஐந்தெழுத்து
ஓதி முப்புரிமாணமாக திருநீறு அணிந்து பூசை செய்யலாம். 
2. தீக்ஷை பெற்றால் ஞானம் பெறலாம். ஞானத்தின் வாயிலாக வீடுபேறு எனும் முக்தி பெறலாம்.
 3.சமய தீக்ஷை பெற்றாலே அவர்களை எமன் அணுக மாட்டான் அதனால் நரகம் இல்லை. அவ்வுயிரை வாங்க ஸ்ரீகண்ட பரமேஸ்வரன் தான் அதிகாரம் பெற்றவர் .
4.விசேட தீக்ஷை பெற்றால் அவ்வுயிரை அனந்த தேவர் வாங்குவார் 
5.நிர்வாண தீக்ஷை பெற்றால் சதாசிவ மூர்த்தி  வாங்குவார் .
6.எமன் வாங்காததால் நரக துன்பம் ஆவியுலக துன்பங்கள் நம்மை அணுகாது.
7.நமது வாரிசுகள் நமக்கு பிதுர் கடன் ஆற்றா விட்டாலும் கூட ஆவியுலக இன்னல் இல்லை 
8. இறைவன் தீக்ஷா கிரியையின் மூலம் மட்டுமே அருளுகிறார் 
9. பில்லி சூன்யம் ஏவல் கண்திருஷ்டி இவை நெருங்காது 
10. பிராணயாமம் செய்யும் போது இருதய நோய் வராது . மாரடைப்பு நெருங்காது .
11. சிவோகம் பாவனைகள்  மூலம் மனம் அடங்கும், .நிம்மதி கிட்டும் ஐம்பொறிகளும் நமக்கு குற்றேவல் புரியும் அப்பர் பெருமான் அதை  பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி என்றதன் மூலம் அறியலாம். பாவனை உயிரை தூய்மைப்படுத்தும் 
12.நியாசம் எனும் (சகளீகரணம் )அங்கசுத்தி செய்வதன் மூலம் வியாதி நீங்கும் அது தான் இன்றைய ரெய்கி.
13.முத்திரைகள் பிடிப்பதால் பிசியோதெரபி 
செய்யும் பலன் கிடைப்பதால் நரம்பு சம்பந்தமான வியாதிகள் நெருங்காது.
14. தீக்ஷை பெற்று  ஆன்மார்த்த பூசை  செய்வதன் மூலம் நமது வினைகள் குறையும்  (பிராரத்தம்). ஆகாமியம் ஏறாது 
15. வறுத்த நெல் முளைக்காது .அது போல தீக்ஷை பெற்ற உயிர் பிறவிக்கு வராது.
15. தீஷை பெற்றவர் இருபிறப்பாளர் ஆகிறார் , தீக்ஷாநாமம் சூட்டப்படும்.
நாள்:
30-01-2020 வியாழக்கிழமை
விஹாரி தை  மாதம் 16 ஆம் நாள்  
(காலை 8 மணி)
தீக்ஷாத்தானம்:
ஸ்ரீ கிரிகுஜாம்பிகா ஸமேத         ஸ்ரீநாகேச்வரர்ஆலயம்,முதலிபாளையம்  
நீலம்பூர், கோயம்புத்துர் - 641062
தீக்ஷா ஆச்சார்யர் :
சிவஸ்ரீ. ஸத்யோஜாத தேசிகர் அவர்கள்
தொடர்பு அலைபேசி எண்
 9965533644  

  ஸ்ரீநாகேச்சரவர் ஆலயம்

https://goo.gl/maps/tLaSkc54VPu1qTkk7


திருச்சிற்றம்பலம்.

Friday, May 4, 2018

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 14


தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 14
  
           திருச்சிற்றம்பலம்



வழிபாடுகளில் ஆப்தவாக்கியமான சிவபரம்பொருள் நாம் உய்யும் பொருட்டு அருளிய வேத சிவாகமங்களான வடமொழி மந்திரங்களே வேண்டும் என்பதை சென்ற பதிவுகளில் வலியுறுத்தி உள்ளோம் .

மேலும் மொழிபெயர்ப்பு மந்திரங்களால் பயனில்லையென முந்தைய பதிவுகளில் மேற்கோள் காட்டியிருந்தோம்.அதாவது அஸ்த்ராய நம என்பது ஆயுதம் போற்றி என மாறி அத்தம்பட் ஆயத்தம்பட் என்று மனம் போன போக்கில் திருத்தியமையை கண்டோம்.

ஆனால் வடமொழியில் காஷ்மீர் முதல் குமரி வரை ஒரே மந்திரம் தான் .

உதாரணத்திற்கு ஆசமன மந்திரங்கள்



1.ஆத்ம தத்வாய ஸ்வதா

2.வித்யா தத்வாய ஸ்வத

3.சிவ தத்வாய ஸ்வதா



ஆனால் இந்த மொழிபெயர்ப்பு மந்திரவாதிகள்



1.போற்றி நாலாறுண்மை

2.போற்றி ஏழ் மெய்யறிவு

3.போற்றி ஐந்தாம் உணர்வு போற்றி (!!!!!) 
இப்படி ஒருவர்



இன்னொருவர்



1.ஓம் எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு என் ஆன்மதத்துவங்களை தாரை வார்த்துத் தருகிறேன்

2.ஓம் எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு என் வித்தியாதத்துவங்களை தாரை வார்த்துத் தருகிறேன்

3.ஓம் எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு என் சிவதத்துவங்களை தாரை வார்த்துத் தருகிறேன்



மற்றொருவர்

1.ஓம் ஆத்ம தத்துவங்களை ஏற்றருள்க

2.ஓம் வித்யா தத்துவங்களை ஏற்றருள்க

3.ஓம் சிவ தத்துவங்களை ஏற்றருள்க



மேலும் ஒருவர்



1.உயிர் மெய்மையை ஏற்றுக்கொள்வீராக

2.கலை மெய்மையை ஏற்றுக்கொள்வீராக

3.சிவ மெய்மையை ஏற்றுக்கொள்வீராக



இன்னும் இருக்கிறது பதிவின் நீளம் காரணமாக தவிர்த்துள்ளோம் . ஏன் இந்த மொழிபெயர்ப்பு வேலை ? .வழிபாட்டில் என்ன புதுமை ? சுவாமிக்குத் தெரியாதா ? தனு கரண புவன போகங்களைக் கொடுத்தவருக்கு தம்மை வழிபட்டு உயிர்கள் நற்கதி பெற என்ன சாதனம் கொடுக்கவேண்டும் எம்மொழியில் கொடுக்க வேண்டும் என்று


இவர்கள் சாமிக்கு வகுப்பு எடுத்து சொல்லிக் கொடுக்கிறார்களா ? நாங்க சொல்றத நீ கேட்டுத்தான் ஆகணும் என்பது மாதிரி என்ன ஆணவ மறைப்பு. மற்ற மாநிலங்களில் ஆன்மீகத்தில் வழிபாட்டில் மொழித்தலையீடு இல்லை . தெலுங்கு வழிபாடு கன்னடவழிபாடு என்று இல்லை . அங்கெல்லாம் இறைவாக்கான சமஸ்கிருத மந்திரங்களைத் துவேஷிப்பதில்லை . மாறாக துதிக்கிறார்கள் .ஆனால் இறை சிந்தனை இல்லாத இக்கூட்டம் ??????



இந்த மூன்று மந்திரத்துக்கு நான்கு பேர் நான்குவிதமாக பொருள் சொல்கிறார்கள் என்றால் இவர்களுக்குள்ளே யார் புலமை மிக்கவர் அறிவாளி என்ற போட்டியே தவிர மக்களை நல்வழிகாட்டி நற்கதிக்குச் செலுத்தும் நோக்கமல்ல .இது காலப்போக்கில் அந்த ஜாதிகாரன் சொன்ன மந்திரத்த நான் சொல்றதா என்று ஜாதிக்கொரு மந்திரமாகும் . இதனால் வழிபாட்டில் குழப்பம் மிஞ்சுமே தவிர நன்மை கிட்டாது .இது போன்ற அசைவர்கள் ஏற்கெனவே ஜாதி பற்றி வழிபாட்டில் புகுத்திவிடடார்கள் ஆம் சத்தியம் இது .ஏனெனில் பிராமணத்துவேஷமாக வந்தது தானே இந்த தமிழ்வழிபாடு என்பது .ஆக ஜாதி ரீதியில் ஏற்கெனவே கிளம்பியாயிற்று

இதில் இன்னும் கொடுமை பின்னாளில் இது மனம் போன போக்கில் ஆளாளுக்கு மந்திரம் மொழிமாற்றம் செய்யப்பட்டு மந்திர பீஜம் எல்லாம் நெல்லை ஸ்லாங்  கோவை ஸ்லாங் மதுரை ஸ்லாங் சென்னை ஸ்லாங் என்று வந்தாலும் வரும்.



ஏனெனில் இந்த கொடுமைக்கு ஒரு உதாரணம் பஞ்சகவ்யம்.

கொங்கு நாட்டுத் தமிழ்வழிபாட்டுக்காரர்கள் பஞ்சகவ்யமானது பால் தயிர் நெய் கோமியம் கோசலம் என பயன் படுத்துகிறார்கள். ஆனால் சென்னைக்காரங்க கோமியம் கோசலத்திற்கு பதிலாக மோரும் வெண்ணையும் பயன்படுத்துகிறார்கள்.



இவர்கள் யாருக்கும் சிவவழிபாடோ அதன் பயனாம் வீடுபேறோ முக்கியம் அல்ல .தமிழ் வியாபாரம் திருமுறை வியாபாரம் காசு பணம் புகழ் இது மட்டுமே . தமிழ் தாய்தமிழ் தமிழ்த்தாய் என்று சொல்வோரே உமக்கு எத்தனை பிறவியாய் தமிழ் தாய் மொழியாக இருக்கிறது. இந்த திராவிட கட்சியின் ஆன்மீகப் பிரிவினருக்கு ஆதரவு கொடுத்தால் சிந்திக்கவே முடியவில்லை ஆன்ம முன்னேற்றத்தை. விழித்துக்கொண்டு படுகுழியில் வீழ்வோரை என்ன சொல்ல ?


திருச்சிற்றம்பலம்